Voter ID Card through Automatic Machine - ECI New Announcement on National Voters Day | தானியங்கி இயந்திரம் வாயிலாக வாக்காளர் அடையாள அட்டை பெரும் வசதி அறிமுகம்
அனைவருக்கும் வணக்கம்
இந்திய தேர்தல் ஆணையம் தற்பொழுது தானியங்கி Machine வாயிலாக வாக்காளர் அடையாள அட்டைகள் பெறும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25-ஆம் தேதி இந்த புதிய வசதியை இந்திய தேர்தல் ஆணையம் துவங்கி வைத்துள்ளது.
பொதுமக்கள் அனைவரும் எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டையில் இணைத்துள்ள மொபைல் நம்பர் மட்டும் இருந்தால் போதும் நீங்கள் இந்த கார்டு இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இந்த இயந்திரம் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை புதிதாக விண்ணப்பித்தவர்கள், பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் செய்திருந்தாலும் உங்களின் புதிய வாக்காளர் அடையாள அட்டையை நீங்கள் பிரிண்ட் செய்து கொள்ளலாம்.
இந்த வாக்காளர் அடையாள அட்டை வண்ண புகைப்படத்துடன் கூடிய பிளாஸ்டிக் அட்டையில் உங்களுக்கு கிடைக்கும்.
இந்த அட்டை தானியங்கி எந்திரத்தின் மூலம் நீங்கள் பெறுவதற்கு கட்டணம் எவ்வளவு என்பதை விரைவில் தெரிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது,
ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினம் தலைமை தமிழக தேர்தல் ஆணையத்தின் மூலமாக சென்னை கலைவாணர் அரங்கில் கொண்டாடப்பட்டது.
விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் நிறுவப்பட உள்ள தானியங்கி எந்திரம் மூலம் புதிய வாக்காளர் அடையாள அட்டை பெறும் வசதி அறிமுகப்படுத்தினார்.
மேலும் எலக்ட்ரானிக் முறையில் வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைன் மூலமாக டவுன்லோட் செய்து கொள்ளும் வசதியையும் தொடங்கிவைத்தார்.
புதிய வாக்காளர்கள் இருவரை மேடைக்கு அழைத்து தானியங்கி இயந்திரம் மூலம் வாக்காளர் அட்டை பெரும் வசதியையும் பயன்படுத்தினர்.
No comments: